வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக கூடிய நிதி : ஜனாதிபதி !

சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Maithri_6_3
சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக இதுவரை அரசாங்கத்தால் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை மற்றும் சிறுவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். 

இன்று காலை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.