பொத்துவில் பகுதியில் குடிநீர் விநியோகம் அடிக்கடி தடை ஏற்பட்டு வருவதனால் மக்கள் இன்னல்களை அனுபவிக்கின்றனர்!

எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் பகுதியில் குடிநீர் விநியோகம் அடிக்கடி தடை ஏற்பட்டு வருவதனால் பொத்துவில் வாழ் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பெரிதும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். பொத்துவில் மக்களின் குடிநீர் விநியோக தாங்கிக்கான கிணறு நாவலாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நாவலாறு ஆற்றில் இருந்தே முழுப்பொத்துவில் மக்களுக்கும் குடிநீர் விநியோகம் இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

IMG_1592_Fotor

 

தற்பொழுது நாவலாறு முற்று முழுதாக வரண்டு காணப்படுகின்றது. நாவலாற்றில் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் குடிநீர் விநியோகத்திற்கான நீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. நீர் தட்டுப்பாட்டின் காரணமாக அறுகம்பை விடுதிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.சில விடுதிகள் பவுசர் மூலமாக நீரினை பெற்று பாவனை செய்துவருகின்றனர். பொத்துவில் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதை கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிபுணர்கள் முன்வர வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

IMG_1626_Fotor IMG_1788_Fotor