கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் !

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நாளை 11 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
-3
 
இந் நிகழ்வு தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இதில் 1000 தமிழ்-முஸ்லிம் வறிய மக்களின் பார்வை குறைவினை பரிசோதனை செய்து அவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கவுள்ளதாகவும் , கண் பார்வை குறைவுள்ள அனைத்து சகோதர,சகோதரிகளையும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் தெரிவித்தார்.