ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதிக்க 2 நாட்களை ஒதுக்குவதாக பிரதமர் அறிவிப்பு!

 

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Ranil

பிரதமர் தெரிவித்ததாவது;

ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த திகதியை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கட்சித்தலைவர்கள் எதிர்வரும் வாரத்தில் இது இடம்பெற்றால் சிறந்தது என கூறினார்கள். ஆகவே, ஜனாதிபதி அலுவலகத்தில் பரணகம ஆணைக்குழு அறிக்கை, உதலகம ஆ​ணைக்குழு அறிக்கை​யை வழங்குவோம். இவை இன்னும் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்படவில்லை. அடுத்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாயின் ஆங்கில அறிக்கையை மாத்திரமே எமக்கு வழங்க முடியும். சபாநாயகருடன் கலந்துரையாடினேன். தேவையான பிரதிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினால் வியாழன், வௌ்ளி விவாதத்தை முன்னெடுக்க முடியும்.