ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

pararajasingham
2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் காவலில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.