குளத்தில் நீராடிய சிறுமி மரணம் !

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஏழு வயது சிறமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமி ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றய சிறுமி காப்பற்றுள்ள சம்பவம் இன்று (06.10.2015) மாலை 05.00 மணியவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

07_Fotor
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான கேணிகர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அப்பகுதியில் கிணருகளில் நீர் வற்றிக் காணப்படுவதால் இரு சகோதரிகளின் பிள்ளைகலான இரண்டு சிறுமிகளும் தங்களது உம்மம்மாவுடன் கேணிநகர் குளத்தில் குளிப்பதற்குச் சென்று குளித்துக் கொண்டு இருக்கும் போதே இருவரும் நீரில் மூழ்கியபோது அயலவர்களின் உதவியுடன் ஒரு சிறுமி காப்பாற்றப்பட்டள்ளதுடன் மற்றய சிறுமி உயிர் இழந்துள்ளார்.

05_Fotor
உயிர் இழந்த சிறுமியும் காப்பாற்றப்பட்டுள்ள சிறுமியும் கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஆண்டு இரண்டு கல்வி கற்று வருபவர்கள் என்றும் இதில் மரணமடைந்துள்ள சிறுமி ஆப்தீன் மின்கா (வயது- 07) காப்பாற்றப்பட்டுள்ள சிறுமி பரீட் ரஸ்கா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

06_Fotor
காப்பற்றப்பட்டுள்ள சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மரணமடைந்த சிறுமியின் சடலமும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.