இந்தியாவின் பணக்காரர்களாக மாறுவார்களா ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-கள் ?

பொது மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து, அது தொடர்பாக வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக்கு வந்த கட்சி ஆம் ஆத்மி. 

65e3abc7-ce37-421c-b3cc-728e989e897f_S_secvpf

இந்நிலையில் டெல்லி சட்டபேரவை உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளை கெஜிரிவால் அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில்,  டெல்லி எம்.எல்.ஏ.-களின் சம்பளம் 50 ஆயிரமாக அதிகரிக்கும். மேலும் சட்டபேரவை நடைபெறும் போது கொடுக்கப்படும் அலவன்ஸ் தொகை 2 ஆயிரமாக அதிகரிக்கும். அவர்களின் தொகுதி அலவன்ஸ் ரூ.50,000 மற்றும் அலுவலக அலவன்ஸ் ரூ.95,000 ஆக அதிகரிக்கும்படி முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது அவர்களின் சம்பளம் 12 ஆயிரமாக உள்ளது. நாட்டிலேயே அசாம் எம்.எல்.ஏ.-கள் தான் அதிகபட்சமாக 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். குறைந்தபட்சமாக கேரள எம்.எல்.ஏ.-கள் 1000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.

டெல்லியின் 70 சட்டபேரவை உறுப்பினர்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர்.