எதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் கைது செய்யப்பட்டார் ?

 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
 
janaka-415x260
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.

 

தற்போது பொலிஸ் பாதுகாப்பில் குறித்த வைத்தியசாலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.