ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது விமானத் தாக்குதலில் 19 பலி : ஐ.நா. கடும் கண்டணம் !

ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 19 பேர் பலியானார்கள்.

Afghanistan-1
இந்த தாக்குதலை ஐ.நா. கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இதை மன்னிக்க முடியாதது மட்டும் அல்ல இது ஒரு குற்ற செயல் என்றும் கூறியுள்ளது. அதேபோல் எம்.எஸ்.எப். எனப்படும் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் என்ற தொண்டுநிறுவனம் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. 

2143

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த மருத்துவமனையில் நோயாளிகளும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர். தாக்குதலில் 19 பலியானார்கள் மேலும் 37 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

kunduz-hospital-af_3462400b
குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் காரணமாக இருக்க கூடும் என தெரியத்துள்ளது.