ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் பிரே­ரணை எமது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது – ஹசனலி

க்­கிய நாடுகள் சபையில் நிறை­வே­றிய அமெ­ரிக்­காவின் பிரே­ரணை தீர்­மா­னத்தை அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். 
சர்­வ­தேச உத­வியை தட்­டிக்­க­ழிக்­காது அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டமை நாட்டை பாது­காக்க உத­வி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி தெரி­வித்தார். இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் விசா­ர­ணைக்கு இலங்கை முஸ்­லிம்­களும் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.
Hasan_Ali
ஐக்­கிய நாடுகள் சபையில் அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை ஏக­ம­ன­தாக அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் பிரே­ரணை எமது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது. 
அமெ­ரிக்கா முன்­வைத்த இந்த பிரே­ர­ணையை ஐக்­கிய நாடுகள் சபையின் 47 நாடு­களும் ஏக­ம­ன­தாக ஆத­ரித்­துள்­ளன. அதேபோல் எமது அர­சாங்­கமும் இந்த பிரே­ர­ணையை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஆகவே இவ்­வாறு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் ஒரு தீர்­மானம் வெளி­வந்­தி­ருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும்.
கடந்த 2002ஆம் ஆண்டு இவ்­வா­றா­ன­தொரு வாய்ப்பு எமக்குக் கிடைத்­தது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் சர்­வ­தேச தலை­யீட்­டுடன் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான முறையில் தீர்­வு­கான ஒரு வாய்ப்பு கிடைத்­தது. ஆனால் அப்­போது எமது தரப்­பினர் அந்த வாய்ப்பை தட்­டிக்­க­ழித்து செயற்­பட்­டதன் விளை­வாக இலங்­கையில் இன­ரீ­தி­யான ஒரு ஆயுத யுத்தம் பல­ம­டைந்­த­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­க­ளையும் நாம் இழக்க நேரிட்­டது.
எனினும் இப்­போது மீண்டும் ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்­துள்­ளது. அதுவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் அதே­போன்­ற­தொரு தீர்வு கிடைத்­துள்­ளது. இம்­முறை நாம் தட்­டிக்­க­ழிக்­காது சர்­வ­தே­சத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கி­யி­ருப்­பது நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்க நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது. அதை அர­சாங்­கமும் தமிழர் தரப்பும் தவ­ற­வி­ட­மாட்­டார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.
மேலும் இம்­முறை ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பிலும் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கடந்த காலத்தில் இலங்­கையில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் மற்றும் மத ரீதியில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அடக்­கு­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஐ.நா ஆணை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆகவே இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் விசா­ர­ணை­களின் போது இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் இந்த விசா­ர­ணைக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­பட வேண்டும்.
அதேபோல் நாட்டில் புதிய அர­சியல் அமைப்பொன்று உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசாங்கமும் சர்வதேசத்திடம் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆகவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறவிடக்கூடாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி