காத்தான்குடியில் – கண்டன ஆர்ப்பாட்டம் !

2-DSC_0387_Fotor

நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் விபச்சாரம்,கள்ளத்தொடர்பு,கலாச்சார விழிப்புணர்வு என்பவற்றுக்கு எதிராக இன்று 02 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
7-DSC_0391_Fotor
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முஸ்லிம்களை பௌத்தரிடம் காட்டிக் கொடுக்காதே,முஸ்லிம் -சிங்கள உறவை சீர் குழைக்காதே,இஸ்லாத்தை கேவலப்படுத்தாதே,போலி அரசியல் செய்யாதே,குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே,போலி அரசியல் செய்யாதே,குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே போன்ற பல்வேறு தமிழ் ,சிங்கள,ஆங்கில மொழியிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
8-DSC_0404_Fotor
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள்,இளைஞர்கள், பொது மக்கள் , நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
DSC_0377_Fotor
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
பழுலுல்லாஹ் பர்ஹான்