நீண்ட இடைவெளியின் பின்னர் “சாந்தி இல்லத்தில் ” சந்தித்துக் கொண்ட தலைவர் , செயலாளர் , தவிசாளர் !

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான ‘தாருஸ்ஸலாமில்’  புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மலை திறந்து வைத்தார்.

rauff , hasan ali , basheer

இன் நிகழ்வில் மௌலவி ஆதம் பாவா அவர்கள் விசேட பயான் சொற்பொழிவென்றை உரை நிகழ்த்தினார்.

 

இது போன்ற பயான் சொற்பொழிவு நிகழ்சிகள் இரு வியாழக்கிழமைக்கு ஒரு தடவை மஃரிப் தொழுகைக்கு பின்னர் கட்சி தலைமையம் தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

12032957_1727612744138733_6280911070326785457_n

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைவர் , செயலாளர் , தவிசாளர் ஒரே மேசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12033042_1727612927472048_6525017563320715007_n 12033091_1727612900805384_3889909212235338226_n 12075096_1727612754138732_6294717956619309381_n 11026286_1727612954138712_2684554382786285979_n 12065519_1727592497474091_8401942466230063421_n 12079704_1727592184140789_4374717796962052675_n