கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு நிகழ்வு !

அசாஹீம் 

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

01_Fotor
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சிறுவர்கள் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க நவரெட்ண மதப் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கல் வழங்கப்பட்டதோடு அவர்களது நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

3_Fotor

4_Fotor 6_Fotor 10_Fotor 14_Fotor 16_Fotor