அட்டகாசம் …..!

எம்.ஏ. தாஜகான்

 

பொத்துவிலில் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசம் காரணமாக களப்பை அண்மித்த கரையோரப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

photo_2015-10-01_04-33-35_Fotor

குறிப்பாக பொத்துவில் களப்புக்கட்டு, அல்-குதா கரையோரங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வீடுகள், தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 

 

இரவு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் இருந்து வருகின்ற யானைகள் பொதுமக்கள் வாழிடங்களை அழித்து வருகின்றமையால் மக்கள் உயிராபத்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

photo_2015-10-01_04-34-26_Fotor

எனவே சம்பந்தப்பட்ட வனவள அதிகாரிகள் உடனடியாக யானைப்பாதுகாப்பு அரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வருமாறு பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

photo_2015-10-01_04-35-01_Fotor