அகில இலங்கை அகதியா சம்மேளனத்தினால் நடைபெற இருந்த இடை நிலைப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பின்னர் நடைபெறும் !

அஸ்ரப்  ஏ சமத்

அகில இலங்கை அகதியா சம்மேளனத்தினால் இடை நிலைப் பரீட்சை 2014 ஏற்கனவே 03.10.2015 ல் நாடு முழுவதிலும் நடைபெற இருந்தன. தவிர்க்க முடியாத காணரத்தினால் இத்தினத்தில் அகதியா பரீட்சை நடைபெறமாட்டாது.

news-graphics-2008-_439963a

ஹஜ் ஜூப் பெருநாள் அடுத்த தினமான வெள்ளிக்கிழமை முஸ்லீம் பாடாசலைகளுக்கு விடுமுறை வழங்கி இத்தினத்தினை 03ஆம் திகதி .சனிக்கிழமை பாடாசலை நடத்தும்படி கல்வியமைச்சு அறிவித்ததினாலேயே அகதியா பரீட்சையை இத்தினத்தில்  நடாத்தமுடியாமல்  உள்ளது. 

ஆகவே எதிா்வரும் அக்டோபா் 24ஆம் திகதி குறிப்பிட்ட அகதியா பரீடசை நடைபெறும்.   என அகதியா சம்மேளத்தின் செயலாளா் எஸ்.எம் சாதிலி தெரிவித்துள்ளாா்.