சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் !

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டுள்ளார்.

Susil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக சுசில் பிரேமஜயந்த அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.