சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள்!

பி.எம்.எம்.ஏ.காதர்

 

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனைக்குடி,மருதமுனை ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இன்று நடைபெறவுள்ளதாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

 

நாளை(01-10-2015)காலை 7.30 மணிக்கு கல்முனைக்குடி றோயல் வித்தியாலயத்திலும்,பி.ப.2.00 மணிக்கு மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்திலும் மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

Unknown

 

இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.மேலும் பிரதேச செயலக அதிகாரிகள்; மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.