தேசியப் பட்டியல் விவகாரம் : குணசேகரவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் நியமனத்தை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் சேர்ப்பது சட்டவிரோதம் எனவும் இதனால் குறித்த நியமனங்களை இரத்துச் செய்யுமாறு கோரி, டிவ் குணசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 

dew gunasekara
இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, இது குறித்த ஆவணங்கள் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என, பிரதிவாதி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி குறித்த மனுவை மீண்டும் ஒக்டோபர் 7ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.