மன எண்கணிதப் போட்டியில் நிந்தவூர் மாணவி சாதனை !

சுலைமான் றாபி

இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

IMG_20150928_180401_Fotor

நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டியில் வெற்றி பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்