கல்குடா – பெருநாள் தொழுகை !

அசாஹீம் 

 

தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடுசெய்த திறந்த வெளியிலான பெருனாள் தொழுகை செம்மண்ஓடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் இன்று (24.09.2015) காலை 06.30 மணிக்கு இடம் பெற்றது.

f_Fotor
இதில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை, மாஞ்சோலை, பதுரியாநகர், பிறைந்துரைச்சேனை போன்ற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

21_Fotor
பெருனாள் தொழுகையினையும் பெருனாள் கொத்பா பேருரையினையும்; கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் ஏ.எல் பீர்முஹம்மது நடாத்தினார்.

6_Fotor 12_Fotor