ராகுல் காந்தி கட்டாய விடுமுறையில் அமெரிக்கா பயணமா? பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் !

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘பீகார் சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியின் பிரசாரத்தை கூட்டணி கட்சிகள் விரும்பாததால், அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.

rahulgandhi

இதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா மறுப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
‘வீக்எண்ட் வித் சார்லி ரோஸ்’ என்ற பெயரிலான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் ஆஸ்பென் நகருக்கு ராகுல் சென்றுள்ளார். அதில், பல்வேறு துறைகளை சேர்ந்த சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். பீகார் தேர்தலில் தோல்வியை உணர்ந்துள்ள பா.ஜனதா, கட்டுக்கதைகளை பரப்பி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.