சிரிய குழந்தையை தத்தெடுத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோடி !

பிரபல ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும் நான்காவது குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

e8da92e0-69b1-4e12-b060-90e94af22596_S_secvpf

இந்த ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் அவர்களின் சொந்த குழந்தைகள். மற்ற 3 குழந்தைகளும் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பிய ஆகிய நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்.

அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட பிறகு, மோசமான உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவிற்கு பல முறை பயணம் மேற்கொண்டார் ஏஞ்சலினா. அங்கு போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து மிகவும் மனம் வருந்தினார். எந்த விதத்திலாவது அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார்.
இதுபற்றி தனது கணவர் பிராட் பிட் உடன் ஆலோசனை நடத்திய பின், சிரியாவில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வெவ்வேறு நிறங்களில் உள்ள குழந்தைகள் அவர்களின் குடும்பத்தை அலங்கரித்து வரும் நிலையில், சிரியாவிலிருந்து அவர்களுடன் இணையப்போகும் குழந்தையுடன் அவர்கள் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.