அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவருக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் !

அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டிருந்த சிவில் பிரதிநிதிகள் மூவருக்கான அங்கீகாரத்தை பாராளுமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் வழங்கியுள்ளது.

just-in

இதற்கமைய, கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஷிஸ் ஆகியோர் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவை ஏற்கனவே கூடிய சந்தர்ப்பங்களின்போது இவர்களது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

எனினும், இவர்களை நியமிப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை.

பாராளுமன்றம் இன்று கூடியபோது பிரதமர் சார்பில் சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, சிவில் பிரதிநிதிகள் மூவரது பெயர்களை சமர்ப்பித்திருந்தார்

இதன்போது வாக்கெடுப்பின்றி இவர்களது பெயர்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.