பிரேமலால் ஜயசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.