காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா!

 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நாளை(19) காலை 8.30 மணிக்கு ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

IMG_7245

அரபுக் கல்லூரித் தலைவரும், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ்.எஸ்.எம்.பி.முகைதீன் தலைமையில் இடம் பெறவுள்ள இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபீஸ்.என்.எம்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.எம்.அலியார் மௌலவி, காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம.அப்துல் காதர் மௌலவி உள்ளிட்ட, மற்றும் பல உலமாப் பெருமக்கள், கல்விமான்கள் எனப்பலரும் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் 07 வருடங்கள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுத் தேறிய 30 மௌலவியாக்களுக்கு ‘மௌலவியா, ஹாபிளா’ பட்டங்கள் வழங்கப் படவுள்ளன.