ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் – பிரதமர்

உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

Ranil-Wickremesinghe

தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 109வது ஜனன தின நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் மூலம் யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார். 

அரசியல் தீர்வு விடயத்தில் மூன்று அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.