ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வன்னி மாவட்டத்துக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் !

11952965_1719296544970353_2877408607894670272_o

 வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் வன்னி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

11930984_1719296091637065_1856209418897474189_o

 வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒரு குழுவாக இயங்கி ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஹாஜியாரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட முன்வந்தார்.

11951648_1719296084970399_4421000293409740817_o

 இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி ,பிரதி அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், ஸல்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தொளபீக், முத்தலிப் பாவா பாருக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

11999684_1719296548303686_3200940230547224799_o

11953537_1719296551637019_482794040869917911_o