புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு !

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. 

Parliament-Sri-Lanka-interior

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை காலை ஆரம்பமாகும் முதல் நாள் அமர்வின் சிறப்பு அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். 

இதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இந்நாட்டு நிரந்தர பிரதிநிதி ஸுப்நாய் நென்ட், அதன் ஆலோசகர் சார்ள்ஸ் சோவேள், உட்பட பல பிரமுகர்கள் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.