சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்பட வேண்டும் : அமைச்சர் ஜோன் !

 சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள்; செல்வதை தடுப்பது தொடர்பில் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

John Amaratunga 3_CI

 இவர் தனது கடமையை இன்று பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே,  மேற்கண்டவாறு கூறினார். சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்பட வேண்டும். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.