மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் பலி – மாவடிவேம்பில் சம்பவம் !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு—ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.குத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ளார்.இச்சம்பவம் ஞாயிறு இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BloodyKnifeVector
பிரம்புக்கூடை விற்பனை செய்யும் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின்போது ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரியவருகிறது.கடுமையாக காயமடைந்த நபர் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் போது மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
36 வயதுடைய கோணேஸ்வரன் ரமேஸ்குமார் என்பவரே பலியானவராவார்.

 

ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபரையும் தேடி வருகின்றனர்.;.சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.