பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா சந்திப்பு !

1706808627Primemin

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். 

சுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.