48அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களில் 33அமைச்சுப் பத­விகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 15 அமைச்­சுக்கள் சுதந்­திரக் கட்­சிக்கும் ….?

 

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை இன்று காலை 11 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி
மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பத­வி­யேற்­க­வுள்­ளது.

 

இரண்டு பிர­தான கட்­சி­க­ளை யும் கொண்ட தேசிய அர­சாங்­கத்தில் 48 அமைச்­ச­ரவை அமைச்­சர்­களும் 45 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் இன்று பத­வி­யேற்­க­வுள்­ளனர். 48அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களில் 33அமைச்சுப் பத­விகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 15 அமைச்­சுக்கள் சுதந்­திரக் கட்­சிக்கும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும் 45 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்சுப் பத­விகள் இரண்டு கட்­சி­க­ளுக்கும் பகி­ரப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்பில் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் சுற்­றாடல் துறை உள்­ளிட்ட ஒரு சில அமைச்சுப் பத­விகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமே இருக்கும். அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பிர­காரம் இது உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நிதி­ய­மைச்­ச­ராக ரவி கரு­ணா­நா­யக்க நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள நி்லையில் அதி­லி­ருந்த வங்கி மற்றும் நிதி நிறு­வ­னங்கள் வேறாக பிரிக்­கப்­பட்டு கபீர் ஹஷீ­முக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் ஹரீன் பெர்­னாண்டோ எம்.பி. க்கு தொலைத் தொடர்­புகள் அமைச்சும் ஹலீம் எம்.பி. க்கு தபால் அமைச்சும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கு மெகா பொலிஸ் அமைச்சும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன. ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டா­வான கயந்த கரு­ணா­தி­லக்­க­வுக்கு ஏற்­க­னவே இருந்த ஊட­கத்­துறை அமைச்சுப் பத­வியும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்கு நெடுஞ்­சா­லைகள் அமைச்சுப் பத­வியும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ராஜித்த சேனா­ரட்­ன­வுக்கு சுகா­தார அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வீட­மைப்பு அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன் அவர் ஏற்­க­னவே வகித்த சமுர்த்தி அமைச்சு சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் துமிந்த திசா­நா­யக்­க­வுக்கு விவ­சாய அமைச்சும் சரத் அமு­னு­க­ம­வுக்கு உயர் கல்வி அமைச்சுப் பத­வியும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. துமிந்த திசா­நா­யக்­க­வுக்கு விவ­சாய அமைச்சுப் பத­வியும் எம்.கே.டி.எஸ். குண­வர்த்­த­ன­வுக்கு புத்­த­சா­சன அமைச்சுப் பத­வியும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அர்­ஜுன ரண­துங்­க­வுக்கு துறை­மு­கங்கள் அமைச்சு கிடைக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அமைச்சுப் பத­வி்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கு­வதில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் இது­வரை இறுதி இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­மையே அமைச்­ச­ரவை பொறுப்­பேற்கும் செயற்­பாடு இழு­ப­றியில் நீடிப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தது. விசே­ட­மாக நிதி­ய­மைச்சு ஊட­கத்­துறை அமைச்சு உள்­ளிட்ட சில முக்­கிய அமைச்­சுக்­களை சுதந்­திரக் கட்சி கோரி வந்­தது.

எனினும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அதற்கு இணங்­கா­மையின் கார­ண­மாக இழு­பறி நிலை நீடித்து வந்­தது. இறு­தியில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் இடம்­பெற்ற முக­கிய பேச்­சு­வார்த்­தை­களின் பின்னர் இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு காணப்­பட்­டது.

அந்­த­வ­கையில் எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வுகள் கடந்த 18 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டன. கடந்த 21 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்றார். எனி­னும்­இ­ரண்டு வாரங்­களின் பின்­னரே தற்­போது அமைச்­ச­ரவை பத­வி­யேற்­கின்­றது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

அந்தவகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளன.