கோட்டாவிடம் இன்று 4 மணித்தியாலங்கள் விசாரணை , நாளையும் விசாரணை !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளது.

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படிருந்தார்.

gotapaya

பகல் 1.30 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் நாளையும் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ தவிர மேலும் 09 பேர் இன்று பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களையும் நாளை மீண்டும் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.