தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு!

 

-எம்.வை.அமீர் –

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு 2015-09-03 அன்று பிரயோக விஞ்ஞான பீட மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அம்பாறை மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலைகளின் இரத்த சேகரிப்புக் குழுவினரினால் மணாவ மற்றும் ஊழியர்களிடமிருந்து அதிகளவிலான இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.

வைத்திய குழுவில் டாக்டர் எல்.ஜி.ஜெயத்ரா மற்றும் டாக்டர் கே.எம்.ஆர்.எஸ்.பெரேரா போன்றோர் இடம்பெற்றிருந்தனர். நிகழ்வுகளுக்கு அதிதிகளாக கலாநிதி கே.கோமதிராஜ் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் பீ.எம்.முபீன் ஆகியோர் கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

IMG_0017_Fotor_Collage_Fotor