ஜனாதிபதியின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை!

அஸ்ரப் ஏ .சமத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று  முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை யொன்று இன்று நடைபெற்றது.

1009_Fotor

 

இந் நிகழ்வு இன்று (3)ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் வீதியில் உள்ள ஜூம்ஆப் பள்ளி வசாலில் லுகா் தொழுகையின் பின் நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும்  துஆப் பிரத்தனை யொன்று நடைபெற்றது. துஆப் பிராத்தனையை மொலவி அப்துல் ரஹ்மான் நிகழ்த்தினாா்.
151_Fotor
இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எல்.ஏ எம். ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எம். மஸ்தான்  மற்றும் கொழும்பு மத்திய ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளரும் பலஸ்தீன் நாட்டுக்கு துாதுவராகச் செல்ல உள்ள பௌசான் அன்வரும் கலந்து கொண்டனா்.
109_Fotor