புதிய அரசியல் யாப்பு அவசியம் , நாடாளுமன்றில் சம்பந்தன் !

கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். 

Rajavarothayam Sambanthan

8வது பாராளுமன்ற அமர்வு இன்று கூடியபோது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்த சம்பந்தன், சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அறிவித்தார். 

புதிய பாராளுமன்றம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில் உள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம், பன்மைத்துவம், சமத்துவம், நீதி என்பவற்றை மீளமைக்க புதிய அரசியல் யாப்பு அவசியம் என்றும் இவை அடிப்படை தேவைகள் என்றும் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.