தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு தான் உள்ளிட்ட ஒரு குழு தயார் இல்லை !

புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

புதிய சபாநாகர் தெரிவின் பின்னர் பாராளுமன்றில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார். 

vasu theva

தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு தான் உள்ளிட்ட ஒரு குழு தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் இதன்போது உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, குறிப்பிட்ட ஒரு வரையறுக்கப்பட்ட கட்டத்திற்குள் அல்லாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு புதிய பாராளுமன்றித்திற்கு முடியும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.