சபாநாயகர் , பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித்தலைவர்கள் நியமிப்பு !

 

Parliament-Sri-Lanka-interior

 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.
 பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்களநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பாராளுமன்றின் ஆளும் கட்சி பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் அவை முதல்வராக லக்ஷமன் கிரியெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பாராளுமன்றம் இன்று மாலை 3 மணிவரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் உரை நிகழ்த்துவார்.