கொழும்பில் நீர் விநியோகம் தடை : எண்ணெய் கலப்பு !

Unknown
கொழும்பு மாநகர சபை பிரதேசம், கோட்டே நகர சபை பிரதேசம் மற்றும் தெஹிவளை-கல்கிஸ்ஸ நகர சபை பிரதேசம் ஆகியவற்றுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் களனி கங்கையில் எண்ணெய் கலந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நீர் சுத்திகரிப்பு நிலையம் சுத்தம் செய்யப்பட்டபின் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.