மனை­விக்கு துரோகம் செய்த கணவனுக்கு மரண தண்டனை !

isis_7

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தனது மனை­விக்கு துரோகம் செய்து பிறி­தொரு பெண்­ணுடன் இர­க­சிய காதல் தொடர்பை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

 

மேற்­படி தீவி­ர­வா­தி­களால் தன்­னி­ன­சேர்­க்­கையில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் 30 பேருக்கும் அதி­க­மா­னோ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே இந்தப் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

ஈராக்­கிய நினெவெஹ் பிராந்­தி­யத்­தி­லேயே இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பிராந்­தி­யங்­களில் தன்­னி­ன­சேர்க்­கை­யா­ளர்கள், பால்­மாற்ற சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்கள் மற்றும் காத­லர்கள் ஆகியோர் நடத்­தப்­படும் விதம் குறித்து ஐக்­கிய நாடுகள் சபையில் நடத்­தப்­பட்ட முத­லா­வது கூட்­ டத்தின் போதே அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு தீவி­ர­வா­தி­க ளால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ளமை குறித்து விப­ரிக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் சர்­வ­தேச தன்­னி­ன­சேர்க்­கை­யா­ளர்கள் தொடர்­பான மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் ஜெஸிக்கா ஸ்ரேர்ன் கூறு­கையில், சிரியா மற்றும் ஈராக்கில் தீவி­ர­வா­தி­க ளால் தன்னினசேர்க்கையாளர்களுக்கு கற்களால் எறிந்தும் துப்பாக்கியால் சுட்டும் தலையைத் துண் டித்தும் உயரமான கட்டடங்களிலிருந்து தள்ளியும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறி னார்