ஜனா­தி­பதி இன்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி சர்­வ­தி­கா­ரி­யாகி செயற்­ப­டு­கின்றார்!

Udaya

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் “மஹிந்த” சார்ந்த குழுவினர் புதிய அணி­யொன்றை ஏற்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தில் தனித்­து­வ­மான எதிர்க்­கட்­சி­யாக செயல்­படப் போவ­தாக ?தூய்மையான ஹெல உறு­ம­யவின் தலை­வ­ரும் எம்.பி.யு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

 

விரைவில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் வெற்­றிலைச் சின்­னமும் காணாமல் போய்­வி­டு­மென்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்­பாக உதய கம்­மன்­பில மேலும் தெரி­விக்­கையில்,

பொது ஜன ஐக்­கிய முன்­ன­ணிக்கும் அதன் கதிரைச் சின்­னத்­திற்கும் நடந்த கதியே ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் வெற்­றிலைச் சின்­னத்­திற்கும் ஏற்­ப­ட­வுள்­ளது. இன்று இம்­முன்­ன­ணி­யி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யேறி ஐக்கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து தேசிய அரசு அமைக்­க­வுள்­ளது.

அத்­தோடு தேர்தல் முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் கட்சித் தலை­வர்கள் கூட்­டமோ மத்­திய செயற்­கு­ழுவோ கூட்­டப்­ப­ட­வில்லை. திட்­ட­மிட்டு வேண்­டு­மென்றே கூட்­டங்கள் கூட்­டப்­ப­டாமல் உள்­ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியை இல்­லா­தொ­ழிக்க முடி­யாது. ஏனென்றால் 95 எம்­பிக்கள் 300 க்கு மேற்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இவர்­களில் வெற்­றிடம் ஏற்­ப­டும்­போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரால் தான் வெற்­றிடம் நிரப்­பப்­பட வேண்டும்.

தேர்­தல்கள் ஆணை­யா­ளரும் இத­னையே ஏற்றுக் கொள்வார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியை செயலி­ழக்கச் செய்யும் நட­வ­டிக்கை தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.இது தொடர்ந்தால் பொது ஜன ஐக்­கிய முன்­ன­ணிக்கு ஏற்­பட்ட கதியே உரு­வாகும். இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி, விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி, எமது தூய்மையான ஹெல உறு­மய சம­ச­மா­ஜக்­கட்சி கம்­யூ­னிஸ கட்சி என அனைத்து கட்­சி­களும் இணைந்து பொது எதிர்­கட்­சி­யாக செயற்­பட தீர்­மா­னித்­துள்ளோம்.

நாம­னை­வரும் பாரா­ளு­மன்­றத்தில் பொது எதிர்­கட்­சி­யாக செயற்­ப­டவும் தீர்­மா­னித்­துள்ளோம். எதிர்­கட்சித் தலைவர் யாரென்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்றோம்.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி சர்­வ­தி­கா­ரி­யாகி செயற்­ப­டு­கின்றார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­னணி சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செயலாளர்களையும் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கினார்.எனவே எதிர்கட்சித் தலைவரையும் ஜனாதிபதி தனக்குள் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நியமிக்கும் நிலைமை தோன்றலாம் என்றார்.