ஜப்பான் பிரதமரின் பாராட்டு !

japan-pm

இலங்கையில் அமைதியான முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் சின் சோ அபே பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக ஜப்பானிய பிரதமர் சின் சோ அபே தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நெருக்கமாக செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் ஜப்பானிய பிரதமர் நம்பிக்கை ​வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்கப்பாட்டிற்கு புதிய அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு ஜப்பான் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்கும் எனவும் சின் சோ அபே குறிப்பிட்டுள்ளார்.