கோட்டாபய ராஜபக்ஷவுக்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் !

kothapaya

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்காலிகமாக வௌிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது. காலி துறைமுகத்தில் கடந்த ஜனவரி 18ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர் வௌிநாடு செல்லக்கூடும் என்ற இரகசியப் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.