பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது – மகிந்த

mahinda ranil

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது என வும் அவர் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார் என்றும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி குறித்து ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளி­யிடும் போதே அவர் இதனை கூறி­யுள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாராளுமன்­றத்தின் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்­பாடும் இல்லை. பாராளுமன்­ற உறுப்­பி­னர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் குமார வெல்­கம எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு பொருத்­த­மா­னவர் என என்­னிடம் கூறி­யுள்­ளனர்.

அதே­வேளை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாராளுமன்­ற உறுப்­பி­னர்­களில் சிலர் அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­வதால் எந்த பிரச்­சி­னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.