ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­பதியிடம்…!

un

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு அர­சாங்கம் தயா­ரா­கி­வ­ரு­கின்­றது.

விசே­ட­மாக யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து இலங்­கையில் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தாக அர­சாங்கத் தரப்பில் உறு­தி­ய­ளிக்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதி ர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் ஒக்­டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இல ங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­குழு அதில் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான உயர்­மட்ட தூதுக்­குழு இம்­முறை ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 20 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்ள நிலை­யி­லேயே அவர் அவ­ச­ர­மாக அமைச்­ச­ரா­கவும் பத­வி­யேற்­றுள்ளார்.

எதிர்­வரும் 14ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­பிக்­க­வு ள்ள நிலையில் இலங்கை குறித்து எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 30 ஆம் திகதி விவா தம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் முதல் நாள் அமர்­வின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்­கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்­ளிட்­ட­வர்கள் இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­க­வுள்­ளனர். அத்­துடன் அன்­றைய தினம் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர வும் உரை­யாற்­ற­வுள்ளார்.

இதே­வேளை செப்­டெம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை மீதான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்கை தொடர்பில் நடத்­தப்­படும் விவா­தத்­திலும் ஆணை­யாளர் அல் ஹுசேன் மற்றும் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அத்­துடன் அமெ­ரிக்கா, பிரிட்டன், சீனா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை மீதான அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர். இறு­தியில் இலங்­கையின் சார்பில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர பதி­ல­ளித்து உரை­யாற்­ற­வுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் 28ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் இலங்­கையின் புதிய அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேர­வையின் தலை­வ­ருக்கு விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே இலங்கை குறித்த அறிக்கை செப்­டெம் பர் மாதத்­துக்கு பிற்­போ­டப்­பட்­டது.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலு த்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூற ப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெனி­வாவில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதி ர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­து டன் இந்­தியா உள்­ளிட்ட 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன.

அந்­த­வ­கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாத­ம­ளவில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் செயற்­பாட்டு ரீதி­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதற்­காக 12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இந்த விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த நிபுணர் குழுவில், சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசை வென்­றுள்­ள­வரும், பின்­லாந்து அரசின் முன்னாள் அதி­ப­ரு­மான மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியே ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் அலு­வ­ல­கத்தின் இலங்கை விவ­காரம் குறித்த விசா­ரணை செயற்­பாட்டு காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் கடந்த ஜன­வரி மாதம் ஆகும்­போது விசா­ரணை அறிக்கை தயார் செய்­யப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அதி­கா­ரிகள் இலங்கை வரா­ம­லேயே விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். காரணம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை மற்றும் விசா­ரணைக் குழு என்­ப­ன­வற்றை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருந்­தது. அந்­த­வ­கை­யி­லேயே தற் ­போது இறுதி அறிக்கை தயார் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சில தினங்­களில் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் இல ங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரியசிங்க இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு விளக்க மளிக்கும் செயற்பாடுகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளினதும் பிரதிநிதிகளையும் அவர் விரைவில் சந்தித்து உரையாடவுள்ள தாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.