நிஷா இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை!

nisha

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரி க்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்­கையின் பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட தென்­னி­லங்கை தரப்­புக்­களை நேற்று சந்­தி­த்து பேச்­சு­வார்த்தை நடத்­திய நிஷா தேஷாய் பிஷ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­ களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள் ளார்.

நேற்று அதி­காலை இலங்கை வந்­த­டைந்த நிஷா தேஷாய் பிஷ்வால் முதல் சந்­திப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவுடன் பேச்சு நடத்­தினார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க் ஷவும் கலந்­து­கொண்டார்.

இதன்­போது புதிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவு குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.

குறிப்­பாக இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் போர்க் குற்றம் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை தொடர்­பா­கவும் இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அந்த விடயம் தொடர்­பா­கவும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்தும் அர­சாங்க பிர­தி­நி­தி­களும் அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இதே­வேளை, நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேஷாய் பிஷ் வால் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இதன்­போது இரு­த­ரப்பு உறவை பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் குறித்தும் இந்த சந்­திப்­பின்­போது பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டு ள்­ளது.

இது இவ்­வாறு இருக்க, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் நிஷா பிஷ்­வா­லுக்கும் இடை­யி­லான சந்­திப்பு இன்று காலை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போதும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறி க்கை குறித்தும் அர­சியல் தீர்வு செயற்­பாடு தொடர்­பா­கவும் பேசப்­படும் என எதிர்­பார் க்­கப்­ப­டு­கின்­றது.

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு இதன்­போது அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லா­ள­ருக்கு தெளி­வு­ப­டுத்­தப்­படும் என் றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்தல் நடந்து முடி­வ­டைந்­துள்ள நிலையில் முத­லா­வது வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­யாக தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இல ங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடு கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப் பிடத்தக்கது.