ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழிக்கும் ‘‘சதி” யின் ஒரு அங்­கமே ஐ.தே. கட்­சியின் தேசிய அரசுப் பொறி­யாகும்!

Udaya

சம்­பந்­தனை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்கி சர்­வ­தேச அந்­தஸ்தை பெற்றுக் கொடுத்து தமி­ழீ­ழத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டத்தை ஐ.தே. கட்சி முன்­னெ­டுப்­ப­தாக குற்றம் சாட்­டிய உதய கம்­மன்­பில எம்.பி. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழிக்கும் ‘‘சதி” யின் ஒரு அங்­கமே ஐ.தே. கட்­சியின் தேசிய அரசுப் பொறி­யாகும் என்றும் அவர் தெரி­வித்தார்.

 

கொழும்பில் நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ‘‘மஹிந்த” அணி ஆத­ர­வா­ளர்­களின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே உதய கம்­மன்­பில எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

1988 ஆம் ஆண்டு இந்­தியா, இலங்­கையை ஆக்­கி­ர­மித்­தது. 2004 ஆம் ஆண்டில் ‘‘சுனாமி” பேர­லையால் நாடும் மக்­களும் நெருக்­க­டிக்­குள்­ளா­னார்கள். 2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ புலி­களை ஒழிக்கும் யுத்­ தத்தை ஆரம்­பித்தார். இதன் போதேல் லாம் தேசிய அரசு தேவை, நாங்கள் இணைந்து செயற்­ப­டுவோம் என ஐ.தே. கட்சி கூற­வில்லை.

ஆனால் இன்று எந்­த­வி­த­மான அவ­சரத் தேவையும் இல்­லாத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் ஐ.தே. கட்சி தேசிய அரசு அமைக்­க­வுள்­ளது. இதன் மூலம் சுதந்­திரக் கட்சி மீதான மக்கள் நம்­பிக்­கையை சிதைத்து அக் கட்­சியை அடுத்த தேர்­த­லுக்கு முன்னர் இல்­லா­தொ­ழிக்கும் ஐ.தே. கட்­சியின் சதித் திட்­டமே இது­வாகும். அத்­தோடு இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்­கவும், அதன் மூலம் சர்­வ­தேச நாடு­களில் சம்­பந்­த­னுக்கு ராஜ­ தந்­திர அந்­தஸ்தை பெற்றுக் கொடுத்து உலக நாடு­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை­களை நேர­டி­யாக நடத்தும் சந்­தர்ப்­பத்தை ஐ.தே. கட்சி ஏற்­ப­டுத்திக் கொடுக்க முயற்­சிக்­கின்­றது.

இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் தனித் தமி­ழீ­ ழத்­துக்கு மேற்­கு­லக நாடு­ களின் ஆத­ரவை சம்­பந்தன் பெற்றுக் கொள்வார். இதுவே மேற்­கு­ல­கி­னதும் ஐ.தே.க. வினதும் நிகழ்ச்சி நிர­லாகும். இன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கலைக்­கப்­படப் போவ­தாகவும் பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இம்­முன்­ன­ணியில் 95 எம்.பி. க்கள் மற்றும் 300 க்கும் மேற்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்கள் உள்ளனர். எனவே கலைப்பது இலகுவான காரியமல்ல. ஆனால் இன்று இம் முன்னணியை செயலிழக்கச் செய்வ தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.