வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் உத்தரவு !

mlam-hizbullah
பழுலுல்லாஹ் பர்ஹான்
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை யாராக இருந்தாலும் சரி கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிசாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில்  நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி களிப்பின் போது இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.