தொற்றா நோய் பிரிவுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் கையளிப்பு!

2_Fotor– அபு அலா –

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் சிகிச்சை இன்று வியாழக்கிழமை (20) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே்.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வின்போது, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தொற்றாநோய் தொடர்பான விளக்க உரையை சிகிச்சை பெறவந்த நோயர்களுக்கு தெளிவுபெரும் வகையில் விளக்க உரையாற்றினார்.

இதன்போது இச்சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்பெற்ற அதிபர் வை.பி.அஹமட் தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவுக்கு ஒரு தொகுதி கப்களை (தேனீர் கப்) வைத்திய அத்தியட்சகரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் டாக்டர்களான எம்.ரீ.எம்.நப்தா, ஜே.யூசுப் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

3_Fotor 1_Fotor