மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு !

DSC03941_Fotor

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
காத்தான்குடியிலுள்ள ஹிழுறியா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாக்களித்தார்.

DSC03944_Fotor

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் பி.செல்வராஜா வாக்களித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

S2530001_Fotor
மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
இம்மாவட்டத்தில் 5 உறுப்பினர்களைத்தெரிவு செய்ய 368 பேர் போட்டியிடுகின்றனர்.16 அரசியல் கட்சிகளும் 30 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் உள்ளன.

DSC03951_Fotor DSC03942_Fotor